• மொபைல்போன்களில் கை விரல் ரேகையை பயன்படுத்தி திரையை திறப்பது போல, உரிமையாளரின் விரல் ரேகையை வைத்து கார் கதவுகளை திறக்கும் வசதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது.
• உரிமையாளர் மட்டுமே காரை திறந்து ஸ்டார்ட் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, கை விரல் ரேகையை அடையாளம் கண்டு, கார் கதவு திறக்கும் நுட்பத்தை ஹூண்டாய் தனது கார்களில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
• முதலாவதாக, ஹூண்டாய் சான்டா ஃ பீ எஸ்யூவியில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த கை விரல் ரேகை மூலமாக கார் கதவுகளை திறக்கும் தொழில்நுட்பம் கொண்ட சான்டா பீ எஸ்யூவி விற்பனை செய்யப்பட இருக்கிறது.
• அதன்பிறகு, பிற நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். வெறும் கார் கதவுகளை திறப்பதற்கு மட்டுமல்ல, காரை ஸ்டார்ட் செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். அத்துடன், காரின் மெமரி ஃபங்ஷன் அடிப்படையில் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்துவிடும்.
• மேலும், கை விரல் உரியவருக்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் விதத்தில், ஸ்டீயரிங் வீல், சைடு மிரர்களையும் சரியான கோணத்தில் திருப்பி வைத்துவிடும். பதிவின் அடிப்படையில் சரியான அளவில் காருக்குள் வெப்பநிலையையும் பராமரிக்கும்.
• கார் கதவில் கைப்பிடிக்கும் அருகில் இருக்கும் சென்சாரில் விரல் ரேகையை பதிவு செய்தால், கார் கதவு திறந்து கொள்ளும். இது நிச்சயம் உரிமையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments